ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஓட்டுச்சாவடிக்குள் அ.தி.மு.க.,வினர் ஆதரவு திரட்டியதால்தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
திருவாடானை தொகுதி ராமநாதபுரம் பாரதிநகர் தனியார் பள்ளி ஓட்டுச்சாவடிக்குள் நின்று கொண்டு வாக்காளர்களிடம் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரித்தனர். இதை பார்த்த தி.மு.க.,வினர் அவர்களுடன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார்சமரசம் செய்து இரு தரப்பினரையும் வெளியே அனுப்பினர்.
இதே போல்சக்கரக்கோட்டைநேரு நகர்சமுதாயக்கூட ஓட்டுச்சாவடிகளில் பூத்சிலிப்இன்றி வந்தவர்களுக்கு பாகம், வரிசை எண் பார்த்து கூறியதில் அ.தி.மு.க.,-தி.மு.க.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதே போல் ராமநாதபுரம் ராஜா தினகர் பள்ளி, வண்டிக்கார தெரு நகராட்சி துவக்க பள்ளி ஓட்டுச்சாவடிகளிலும் சிறு பிரச்னைகள் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE