பல்லடம்:கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், குழந்தை உயிரிழந்தது.திருநெல்வேலி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜா, 32. இவரது மனைவி சந்திரா செல்வி, 22, மற்றும் ஒன்றரைமாத கைக்குழந்தைஇத்திசன் ஆகியோர், பல்லடம் அருகே வசிக்கின்றனர்.கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். குழந்தையுடன் சந்திரா செல்வி வசித்து வந்த நிலையில், நேற்று மாலை, அரளி விதையை அரைத்து குழந்தைக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார்.அருகிலுள்ளவர்கள் பார்த்து, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. சந்திரா செல்வி சிகிச்சை பெற்று வருகிறார். பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE