சென்னை:தமிழக அரசின் முன்னாள்தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் இருந்து, தென்மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலைமை செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், பணி ஓய்வுக்கு பின், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், தொழில்நுட்ப உறுப்பினராக நியமிக்கப்பட்டார். டில்லியில் உள்ள, முதன்மை பசுமை தீர்ப்பாயத்தில் பணியாற்றி வந்த அவர், சென்னையில் உள்ள, தென்மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இங்கு, தொழில்நுட்ப உறுப்பினராக பணியாற்றி வந்த சாய்பால் தாஸ்குப்தா, கோல்கட்டா அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் உள்ள, தென்மண்டல அமர்வு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வாக செயல்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE