சென்னை:''அ.தி.மு.க., அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதால், அதற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, எழுச்சியுடன் வந்து ஓட்டளிக்கின்றனர்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
ராயபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான ஜெயகுமார், சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் உள்ள பூத்தில், நேற்று ஓட்டளித்தார்.பின், அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து உள்ளதால், அதற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, அவர்கள் எழுச்சியுடன் ஓட்டளித்து வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சி தொடரும் என, உறுதியாக கூறுகிறேன். அதே நேரம் ஸ்டாலின் பேச்சில், அவநம்பிக்கை தான் உள்ளது. அவரால் தி.மு.க., வெற்றி பெறும் என, உறுதியாக கூற முடியவில்லை.கொளத்துார், சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி உட்பட, ஐந்து தொகுதிகளில் பணப் புழக்கம் அதிகமாக இருந்ததால், நடவடிக்கை கோரி, தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தோம். தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறேன்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE