சென்னை, : வில்லிவாக்கத்தில், ஓட்டுச்சாவடி ஒன்றில் ஏற்பட்ட மின் தடையால், வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில், தெற்கு ஜெகநாதன் நகர், 2வது பிரதான சாலையில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், 14 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.இதில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை, 10:00 மணி முதல், ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு மேல், ஓட்டுப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், வாக்காளர்கள் பெரும் அவதியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE