அன்னூர்:அதிகாரிகள் வாக்குறுதியால், தேர்தல் புறக்கணிப்பை கிராம மக்கள் வாபஸ் பெற்றனர்.காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையம் மற்றும் செங்காட்டில், 467 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில், காட்டம்பட்டியில் இருந்த ஓட்டுச்சாவடி கணேசபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஓட்டு போட, ஆறு கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது.புதிய ஓட்டுச்சாவடி அமைத்ததை ரத்து செய்ய வலியுறுத்தி, தேர்தலை புறக்கணிக்கிறோம் என அறிவித்தனர். நேற்று மதியம் வரை, வாக்களிக்காமல் இருந்தனர். மதியம் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். 'விரைவில் காட்டம்பட்டியிலேயே, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தமுறை கணேசபுரத்தில் வாக்களியுங்கள்' என்று கேட்டுக் கொண்டனர்.அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று, கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்று, கணேசபுரம் சென்று வாக்களித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE