மயிலாப்பூர்:தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, நடிகை குஷ்பு மீது, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பு, ஆயிரம்விளக்கு தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு மயிலாப்பூர் தொகுதியில்தான் ஓட்டு உள்ளது.நேற்று ஓட்டு போடுவதற்காக, சென்னை, மந்தைவெளி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி ஓட்டுச்சாவடிக்கு சென்றார். அப்போது, குஷ்புவின் காரில், பா.ஜ., கொடி கட்டப்பட்டிருந்தது. தேர்தல் விதிகளின்படி, ஓட்டுச்சாவடிக்கு, 100 அடி துாரத்தில், கொடி, சின்னங்கள் இருக்கக் கூடாது. ஆனால், காரில் கட்சி கொடியுடன் வந்த குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., நிர்வாகிகள், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE