விழுப்புரம் : விழுப்புரம் அருகே பதற்றமான ஓட்டுச்சாவடியில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டபோது, துணை ராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான 86 ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் பதற்றமான பிடாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் வாக்காளர்களிடம் தாங்கள் சார்ந்த கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டனர்.இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதனைக் கண்ட துணை ராணுவத்தினர், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை காட்டி மிரட்டி கும்பலை கலைத்தனர்.
இதேபோன்று, சகாதேவன்பேட்டையில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE