பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் கொரோனா பாதிப்பு குறித்து கவலை கொள்ளாத வாக்காளர்கள் சமூக இடைவெளியை மறந்தனர்.நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு, சானிடைசர், கையுறை மற்றும் வெப்ப அளவை கணக்கீடு செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை பணிகள் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், பொதுமக்கள் இது குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல், சமூக இடைவெளியை மறந்து நீண்ட நேரம் வரிசையில் மிகவும் நெருக்கமாக என்று ஓட்டு போட்டனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் பல முறை எச்சரித்தும் பொதுமக்கள் இது குறித்து கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டினர். இதனால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE