ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 21 பேர் நேற்று ' டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று, 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8,791 ஆனது. நேற்று, 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 8,584 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 50 ஆக உள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,' கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள், விமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE