ஊட்டி:ஊட்டியில் உள்ள ஜோசப் பள்ளி ஓட்டு சாவடியில், நேற்று காலை, 40 ஓட்டுக்கள் பதிவான நிலையில், மின்னணு இயந்திரம் பழுதானது. பின், மாற்று இயந்திரம் பயன்படுத்தி ஓட்டுப்பதிவு நடந்தது.ஓட்டுப்பதிவு முடிந்து இரவு, 7:00 மணிக்கு பின், 'சீல்' வைக்கப்பட்டது. இந்நிலையில், மாற்று இயந்திரம் மாற்றப்பட்டது குறித்து பா.ஜ., நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என, குற்றம் சாட்டி, ஓட்டு சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். இதனால், தி.மு.க.,- பா.ஜ.., கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. தாசில்தார் குப்புராஜ் பேச்சு நடத்தினார். இதை தொடர்ந்து இரு கட்சியினரும் கலைந்து சென்றனர். மின்னணு இயந்திரம் 'சீல்' வைக்கப்பட்டு பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE