போடி,:தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைந்தது.
போடி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் ஓட்டுச் சாவடிகளை நேற்று மதியம் 3:15 மணிக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத் பார்வையிட சென்றார். ஒன்றிய செயலாளர் சற்குணம், கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
கார் ஊருக்குள் நுழைந்ததும் அடையாளம் தெரியாத சிலர் எம்.பி.,யின் கார், உடன் வந்த காரின் மீது கற்களை வீசினர். இதில் கார்களின் கண்ணாடி சேதமடைந்தது. மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி எஸ்.பி., சாய் சரண்தேஜஸ்வி, டி.எஸ்.பி., பார்த்திபன் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. ரவீந்திரநாத் கூறுகையில், தி.மு.க., கொடியை தலையில் கட்டிய, குடிபோதையில் இருந்த நபர்கள் காரில் இருந்த என்னை நோக்கி கல் வீசினர்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE