மூணாறு:கேரளாவில் ஏப். 10 வரை பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாநிலத்தில் சில இடங்களில் 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதேபோல் மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை இடி,மின்னல் ஏற்படும் என்ற போதும், அது மலையோர பகுதிகளில் வலுவடைய வாய்ப்புள்ளது. மனித உயிர், மின் உபகரணங்கள் ஆகியவற்றிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE