குன்னுார்:குன்னுார் பகுதியில், பல பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் நேற்று காலை முதல், ஆர்வத்துடன் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் ஓட்டுச்சாவடி மையத்திற்கு, புதுக்காடு கோழிக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குரும்பர் இன ஆதிவாசி மக்கள், வனப்பகுதியில் 3 கி. மீ., துாரம், நடந்து சென்று ஓட்டளித்தனர்.பழங்குடியின பெண்கள் கூறுகையில்,'பல தேர்தல்களிலும் இதே போல நடந்து வந்து தான் ஓட்டளித்தோம். எங்கள் கிராமங்களுக்கு பெரும்பாலும் பிரசாரத்துக்கு கூட வேட்பாளர்கள் வருவதில்லை. ஆனால், ஓட்டுபோடுவது எங்கள் கடமை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE