சென்னை:'தேர்தல் விதிகளை மீறிய உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம்அளித்துள்ள புகார் மனு:சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதிஓட்டுப்பதிவு தினமான நேற்று மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.இ.டி. மகளிர்கல்லுாரியில் ஓட்டுச்சாவடி எண் - 19ல் ஓட்டளிக்க சென்றார்.அப்போது தி.மு.க. கொடியுடன் கூடிய சூரியன் சின்னத்தை தன் சட்டையில் குத்தி சென்று ஓட்டளித்துள்ளார்.

இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல். பிரசார தடையை மீறிய செயலாகவும் தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகவும் கருதப்படுகிறது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
'இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE