போடி : போடி அருகே பத்திரகாளிபுரத்தில் கட்சி கொடி, சின்னம், போஸ்டர் ஒட்டவும் தடை விதித்த கிராமத்தில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலையில் துவங்கிய வெயிலின் தாக்கம் மாலை வரை இருந்தது. இதனையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
துரைராஜபுரம் காலனியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்ததால் 7:00 மணிக்கு துவங்க வேண்டிய ஓட்டுப்பதிவு காலை 8:00 மணிக்கு துவங்கியது. பத்திரகாளிபுரத்தில் வீட்டின் சுவர்களில் கட்சி சின்னங்கள், போஸ்டர், பிளக்ஸ் போர்டு, கட்சி கொடி கட்டவும் தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் அமைதியான முறையில் ஓட்டளித்தனர். விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், போடி நகராட்சிக்கு உட்பட பல இடங்களில் உள்ள ஓட்டு சாவடிகளில் வாக்காளர்கள் நிழலில் நின்று ஓட்டளிக்க வசதிகள் இல்லாத நிலையில் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
போடி புதுார், திருமலாபுரம், சுப்புராஜ்நகர் உள்ளிட்டவை பதட்டமான ஓட்டுச்சாவடி என அறிவித்திருந்தும் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் சிறு சிறு பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை. ஓட்டுச்சாவடிக்குள் செல்லும் போது வாக்காளர்களுக்கு சானிடைசர், கையுறை வழங்க உத்தரவிட்டும் சில இடங்களில் நடைமுறைப்படுத்தவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE