தாண்டிகுடி : சட்டசபை தேர்தலையொட்டி தாண்டிக்குடி மலைப்பகுதியில் பஸ்கள் இயக்கப்படாததால் வாக்காளர்கள் அவதி அடைந்தனர்.
கீழ் மலைப் பகுதி தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஆடலுார், கே. சி .பட்டி, பாச்சலுார், பெரியூர் பகுதியில் நேற்று காலை முதலே அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. சில தனியார் பஸ்களும் இயக்காததால் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் அவதியடைந்தனர்.தொலைதூர ஓட்டுச்சாவடிகளுக்கு பொது மக்கள் நடந்தும், சரக்கு வாகனங்களில் தொற்றியும் பயணித்தனர்.
போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பணியாளர்கள் ஓட்டளிக்க காலையில் ஒரு பகுதியினரும், மதியம் ஒரு பகுதியினரும் சென்றனர். இதனால் மலைப்பகுதிக்கு சரிவர பஸ்சை இயக்க முடியவில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE