திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு வழங்கினர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக தொற்று பரவலை தடுக்க, வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடியில் முகக்கவசம், கையுறை வழங்கப்பட்டது. கொரோனா மீண்டும் 2வது அலையாக உருமாறியுள்ளதால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்படுகிறது.
நேற்று திண்டுக்கல்லில் ஓட்டுப்பதிவுக்கு பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளோ சுற்றுலா வந்தது போல கருதி ஓட்டுச்சாவடிக்குள் ஓடிவிளையாடினர்.தேர்தல் அலுவலர்கள், போலீசார், அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் 'கொரோனா பரவல் உள்ளபோது, குழந்தைகளை ஏன் அழைத்து வருகிறீர்கள். குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE