திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டுச்சாவடிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைபிடிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதியில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. முன்னதாக வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான கட்டங்கள் போடப்பட்டிருந்தன. வாக்காளர்கள் சாவடிக்குள் நுழையும்போதே வெப்பநிலைமானி கொண்டு பரிசோதித்தனர்.
கிருமிநாசினி, கையுறை வழங்கிய பின்பே ஓட்டுச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நடைமுறை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இடத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE