திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்த பூத் முகவர்களால் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் ஓட்டைப்பதிவு செய்தனர். ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்சியினர் முகாம் அமைத்து வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தனர். ஓட்டுப்பதிவு மையத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் புனித மரியன்னை தொடக்கப் பள்ளி, காந்திஜி பள்ளி, வாசவி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களிடம் ஓட்டுப்பதிவு மையத்திற்குள் இருக்க வேண்டிய முகவர்கள் வெளியே வந்து சைகை மொழியில் ஓட்டு சேகரித்ததால் மற்ற கட்சியினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். அடம் பிடித்த கட்சியினரை மையத்தை விட்டு வெளியேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE