விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் பகுதியில் உழவுப் பணிகளுக்கு காங்கேயம் இன பசுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கிராமங்களில் முன்பு விவசாயிகளின் வீடுகளில் உழவு மாடுகள் வளர்க்கப்பட்டன. இவற்றின் உதவியுடன் ஏற்றம் இறைத்தல், உழவு, வண்டி பாரம் இழுக்கும் பணிகள் நடந்தன.இயந்திரங்கள் வருகையால் உழவு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் காங்கேயம் காளைகளுக்கு பதில் பசுக்களை வைத்து உழவுபணியை மேற்கொண்டு வருகின்றார்
கல்புளிச்சான்பட்டி விவசாயி சதீஷ் 40.அவர் கூறியதாவது:உழவுப் பணிகள் இல்லாத போது பசுக்களை, கிடை மாடுகளுடன் மேய்ச்சலுக்கு விடுவேன். இதன் மூலம் பசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன், நாட்டின கன்றுகுட்டிகள் கிடைக்கும்.பசுவின் பால் கன்றுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். உழவுக்கு இப்பசுக்களை பழக்குவதும் எளிது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE