திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி மையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏ.டி.ஜி.பி., ஆனந்த மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன் நேற்று காலை 7:30 மணி அளவில் மண்ணாடிப் பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு, திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, வாதானுார், பி.எஸ்.பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடி மையங்களை ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து கேட்டறிந்தார். மேற்குப் பகுதி எஸ்.பி., ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா, சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE