புதுச்சேரி : தி.மு.க., வேட்பாளரின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.,வினரை கண்டித்து சாலை மறியல் நடந்தது.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சம்பத் ஆதரவாளர் பாரதி மில் திட்டை சேர்ந்த சந்திரசேகரன், 39; கடலுார் சாலையில் நேற்று மதியம் நின்றிருந்தார். அங்கு வந்த அ.தி.மு.க.,வினர், எங்களை எதிர்த்து ஓட்டு கேட்கிறீர்களா என கேட்டு அவரை தாக்கி பூத் சிலிப்பை கிழித்து எறிந்தனர். இதை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே தி.மு.க.,வினர் மாலை 7.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க., வேட்பாளர் சம்பத் தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தினார்.
புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். சந்திரசேகரன் கொடுத்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மறியலால் அப்பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE