விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளரின் உறவினர் மற்றும் தி.மு.க., வேட்பாளரின் கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு கஞ்சனுார் காலனி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து சென்ற வேட்பாளரின் உறவினர் சேகரின் காரை, வி.சி., கட்சியினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.இந்நிலையில், வி.சி.கட்சியினர் சேகரின் கார் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கஞ்சனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, மாலை 6:00 மணியளவில் தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி காணை ஒன்றியம் கல்பட்டு பகுதி ஓட்டு சாவடியை பார்வையிட சென்ற போது, அங்கிருந்த அ.தி.மு.க., வினர், புகழேந்தி காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.இதுகுறித்து காணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு வேறு சம்பவங்களால் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., வினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE