தி.நகர் : தேர்தலை முன்னிட்டு, வர்த்தக மையமான தி.நகர், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் உள்ள, 234 தொகுதிகளிலும், நேற்று சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப் பதிவாகும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.அதன் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும், விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, அலுவலகத்தை நடத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.இதன் காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும், சென்னையின் வர்த்தக மையமான, தி.நகர், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE