சென்னை : -வாக்காளர்கள் சிரமத்தை போக்க, வழிகாட்டி வரைபடம் வழியாக, ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காட்டப்பட்டன.
கொரோனா பாதிப்பால், ஒரு ஓட்டுச்சாவடியில், 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், இரண்டு ஓட்டுச்சாவடியாக அமைக்கப்பட்டன. இதனால், ஒவ்வொரு தொகுதியிலும், ஓட்டுச்சாவடி இரு மடங்காக அதிகரித்தது. முன், ஒரு மையத்தில், 10 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது, 20 முதல் 25 ஓட்டுச்சாவடிகள் வரை இருந்தன. 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், ஆண், பெண் என, இரு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன.உதாரணமாக, பாகம் எண் கூட, ஆண் ஓட்டுச்சாவடி என்றால், '81 எம்' எனவும், பெண் ஓட்டுச்சாவடி என்றால், '81 ஏ, டபிள்யூ' என குறிப்பிடப்பட்டது.
இதனால், ஓட்டுச்சாவடியை கண்டுபிடிப்பதில், வாக்காளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த சிரமத்தை போக்க, வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், வழிகாட்டி வரைபடம் அமைக்கப்பட்டது. நுழைவாயிலில், எந்தெந்த திசையில் ஓட்டுச்சாவடிகள் இருக்கிறது என, வரைபடம் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்தந்த ஓட்டுச்சாவடி முன், பாகம் எண் குறித்த பலகை வைக்கப்பட்டது. இதனால், வாக்காளர்கள் சிரமம் இல்லாமல், ஓட்டுச்சாவடிகளை தெரிந்து கொண்டு, ஓட்டுப்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE