திருத்தணி : அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டும் என, பணப் பட்டுவாடா செய்த இருவர், பணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
திருத்தணி ஒன்றியம், தெக்களூர் எம்.ஜி.ஆர்., நகரில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சென்ற பறக்கும் படை அலுவலர் கோமதி மற்றும் அவரது தலைமையிலான குழுவினர், பணம் வினியோகம் செய்யும் இடத்திற்கு சென்றனர்.அப்போது, பணம் வினியோகம் செய்த இருவர், பணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினர். பின், பறக்கும் படையினர், 23 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE