சென்னை : கும்மிடிப்பூண்டி -- கவரைப்பேட்டை இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை மின்சார ரயில்கள், இன்று முதல், 10ம் தேதி வரை பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, சூலுார்பேட்டைக்கு, பகல், 12:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், இன்று முதல், 10ம் தேதி வரை, எலாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, மதியம், 1:25 மணி மற்றும் மாலை, 3:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் சென்ட்ரலில் இருந்து, சூலுார்பேட்டைக்கு, மதியம், 2:35 மணிக்கும், வேளச்சேரியில் இருந்து மதியம், 1:55 மணி, 2:55 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்களும், பொன்னேரி வரை மட்டும் இயக்கப்படும் சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு மாலை, 4:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், பொன்னேரி வரை மட்டும் இயக்கப்படும்
கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்ட்ரலுக்கு மாலை, 3:40 மணிக்கு இயக்க வேண்டிய ரயில், கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்ட்ரலுக்கு மாலை, 5:00 மணி, 5:30 மணி மற்றும் மாலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி -- பொன்னேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன கும்மிடிப் பூண்டிலிருந்து, மாலை, 3:15 மணிக்கும், சூலுார்பேட்டையிலிருந்து, மாலை, 3:10 மணிக்கும், சென்னை சென்ட்ரலுக்கும், சூலுார்பேட்டையிலிருந்து, மாலை, 5:15 மணிக்கு வேளச்சேரிக்கும் இயக்க வேண்டிய ரயில்கள், இன்று முதல் 10ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்கள்கும்மிடிப்பூண்டியில் இருந்து, பகல், 1:55 மணி, பொன்னேரியில் இருந்து, மாலை, 4:20 மணிக்கு, சென்ட்ரலுக்கும், எலாவூரில் இருந்து மதியம், 2:10 மணிக்கு கடற்கரை நிலையத்துக்கும், இன்று முதல், 10ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE