புதுடில்லி: கொரோனா பரவலில் புதிய உச்சமாக, நேற்று (ஏப்ரல் 6) ஒரே நாளில் மட்டும் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.630 பேர் உயிரிழந்துள்ளனர். 59,856 பேர் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி

பரிசோதனை
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,08,329 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,14,39,598 ஆக அதிகரித்து உள்ளது.

உலக பாதிப்பு
இன்று (ஏப்ரல் 7-ம் தேதி) காலை 09:45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 30 லட்சத்து 28 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 லட்சத்து 86 ஆயிரத்து 069 பேர் பலியாகினர். 10 கோடியே 72 லட்சத்து 68 ஆயிரத்து 799 பேர் மீண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE