சென்னிமலை: சென்னிமலையில் பாட்டி யின் ஓட்டை போட்டதால், ஆத்திரமடைந்த பேரன், தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை, வடக்கு ராஜவீதி, கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில், நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. சென்னிமலை, காமாட்சியம்மன் கோவில் அருகில் வசிக்கும் லட்சுமியம்மாள், 73, ஓட்டு போட வந்தார். ஆனால், அவரது ஓட்டை யாரோ போட்டு விட்டது தெரிந்தது. இதனால் தேர்தல் அதிகாரிகள் அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மூதாட்டி, தனது பேரன் பாபுவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சென்ற பாபு, மூதாட்டியை அழைத்துக் கொண்டு பூத்துக்கு சென்றார். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டார். அப்போது வந்த மண்டல தேர்தல் அதிகாரி, பாபுவை மரியாதைக் குறைவாக பேசி, வெளியேறுமாறு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாபு வெளியே வந்து, அங்கிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் முறையிட்டார். இதனால் பாட்டிக்கு ஓட்டு போட அதிகாரிகள் அனுமதித்தனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளதாக, பாபு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE