ஆத்தூர்: ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை, 4:00 மணி முதல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், வெளியூரில் இருந்து, ஓட்டுப்போட, சொந்த ஊர் செல்ல வந்தவர்கள் அவதிக்குள்ளாகினர். காலை, 6:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பயணியர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தடங்களில், அரசு பஸ்களை இயக்கக்கோரி, பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வேறு தடங்களில் சென்ற அரசு பஸ்களை, பஸ் ஸ்டாண்டுக்குள் விடாமல் வழியில் நின்று மறித்தனர். ஆத்தூர் டவுன் போலீசார், பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலக கிளை அலுவலக அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர். 7:00 மணிக்கு மேல், அனைத்து தடங்களிலும் பஸ்கள் இயக்கப்பட்டதால், மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE