சேலம்: சேலம் வடக்கு தொகுதி, கோகுல நாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில், அறை எண்: 179ல் ஓட்டுப்போட, மேட்டுத்தெருவை சேர்ந்த சிவபிரகாசம் மனைவி சாந்தி, 55, வந்தார். அப்போது, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், 'ஏற்கனவே தபால் ஓட்டு போட்டுள்ளதால், தற்போது ஓட்டளிக்க முடியாது' என மறுத்தார். அதிர்ச்சி அடைந்த சாந்தி, தபால் ஓட்டுப்போடவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்தார். அதிகாரிகள் விசாரித்ததில், தபால் ஓட்டு போடப்பட்டதாக தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால், சாந்தியை ஓட்டுப்போட அனுமதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE