தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 1.65 கோடி ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போயின. தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும், தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை, விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 523 விவசாயிகள், 1,114 குவியல்களாக, 43 ஆயிரத்து, 100 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 167 முதல், 455 ரூபாய் வரை சராசரியாக, 455 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, ஒருகோடியே, 64 லட்சத்து, 80 ஆயிரத்து, 894 ரூபாயாகும். கடந்த ஒரு மாதத்தில் நடந்த, இந்த பட்டுக்கூடு ஏலத்தால், 24 லட்சத்து, 7,218 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE