காரிமங்கலம்: மேடுஹள்ளியில், ஓட்டுச்சாவடி உள்ளே நுழைந்து, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரிமங்கலம், மல்லிக்குட்டை பஞ்.,க்கு உட்பட்ட மேடுஹள்ளி, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்டது. நேற்று இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 5:00 மணியளவில் ஓட்டுச்சாவடிக்குள் மல்லிக்குட்டையை சேர்ந்த சின்னசாமி, 35, என்பவர் கையில் கற்களை எடுத்துக்கொண்டு ஆவேசமாக நுழைந்தார். அவரை பாதுகாப்பு பணியிலிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தடுத்தபோது, அவரை கீழே தள்ளிவிட்டு, சின்னசாமி ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்தார். பின் அங்கிருந்த ஓட்டு இயந்திரத்தை கீழே வீசினார். பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கீழே வீசிய ஓட்டுப்பதிவு இயந்திரம் சேதம் ஏற்படாததால், 15 நிமிடங்களுக்கு பின், மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE