கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், தனி சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடி மையங்களில், தி.மு.க., வேட்பாளர் நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணராயபுரம் தனி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் வேட்பாளர் வக்கீல் சிவகாமசுந்தரி நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று காலை முதல், ஓட்டுச்சாவடி மைங்களில் நடக்கும் ஓட்டுப்பதிவு பற்றி நேரில் அறிந்து கொள்ளும் வகையில், பழையஜெயங்கொண்டம், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், கோவக்குளம் ஆகிய இடங்களில் உள்ள மையங்களை பார்வையிட்டார். மேலும் கட்சி நிர்வாகிகளிடம், ஓட்டுப்பதிவு எவ்வாறு இருக்கிறது என கேட்டறிந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE