கரூர்: கரூர் அருகே செம்மடையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, அதில் பயணிகள் ஏறி செல்கின்றனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு, நிழற்கூடம் முன்புறம், மண் கொட்டப்பட்டது. இதை அகற்றவில்லை. இதனால், நிழற்கூடத்தில் பயணிகள் நிற்க முடியாமல், திறந்த வெளியில் கொளுத்தும் வெயிலில் நின்று வருகின்றனர். எனவே, நிழற்கூடம் முன் கொட்டப்பட்டுள்ள மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE