தர்மபுரி: சட்டசபை தேர்தலையொட்டி, கட்சி தொண்டர்களை கவனிக்க, வேட்பாளர்கள் அதிகளவில் பிரியாணி பார்சல்களை வாங்கியதால், தர்மபுரி நகர் பகுதியிலிருந்த பிரியாணி கடைகள் பிசியாக இருந்தன.
சட்டசபை தேர்தலையொட்டி, தர்மபுரியில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில், பொதுமக்கள் ஓட்டளிக்க மிக ஆர்வம் காட்டினர். மேலும், தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று, கட்சி நிர்வாகிகளின், தேர்தல் பணிகளை பார்வையிட்டனர். இந்நிலையில், ஓட்டளித்த கட்சியினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினருக்கு, சிக்கன், மட்டன் பிரியாணி வகைகளை மதிய உணவாக வழங்க வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், பிரியாணி கடைகளில், பார்சல் பிரியாணி அமோகமாக விற்பனையானது. கடை பணியாளர்கள் பார்சல் கட்ட முடியாமல் திண்டாடினர். முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அதிகளவில் பிரியாணி செய்திருக்கலாம் என கடைக்காரர்கள் புலம்பினர். கட்சியினர், பிரியாணி பார்சல்களை மொத்தமாக வாங்கிச் சென்றதால், வழக்கமாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்க முடியாமல் கடைக்காரர்கள் தவித்தனர். இதனால், பெரிய மற்றும் சிறியளவில் கடை நடத்தி வந்த, பிரியாணி கடைகளும், நேற்று பிசியாக இருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE