பள்ளிபாளையம்: ''அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த கோவிந்தம்பாளைம் அரசு பள்ளியில், குடும்பத்துடன் அமைச்சர் தங்கமணி ஓட்டளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''முதல்வர் பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். முதல்வர் பழனிசாமியின் அலைதான் வீசுகிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்பார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE