தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மே, 2ம் தேதி வரை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களை, கவனமாக பாதுகாத்திட வேண்டும். அந்த மையங்களில், நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்; சி.சி.டி.வி., கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிக்க வேண்டும்.
அங்கு பணியிலிருப்போர் தவிர, வெளியாட்களின் நடமாட்டம், யாரேனும் அத்துமீறி நுழைகின்றனரா என்பது பற்றி, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை துவங்கும் வரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில், 'டர்ன் டூட்டி' அடிப்படையில், தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து, கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் இரவு, பகலாக தொய்வின்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால், உடனே கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள் வரை, நமக்கான பொறுப்பும், கடமையும் நிறைய இருக்கிறது. இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE