சென்னை:தேர்தல் பணிக்கான மாற்று ஊழியர்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்துக் கொடுக்காமல் ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்களை தேர்தல் கமிஷன் தவிக்கவிட்டது.
சென்னை புறநகரில் உள்ள தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உடல் சுகவீனம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக பணிபுரிவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் நுாற்றுக்கணக்கான மாற்று பணி ஆண் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.அவர்களும் தேர்தலுக்கு முதல்நாள் பல்வேறு பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்ட தொகுதிக்கு வந்து சேர வேண்டும்.
அவர்கள் தங்குவதற்கும் உணவுக்கும் தேர்தல் கமிஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அவ்வாறு வந்த மாற்றுப் பணி ஊழியர்களை தேர்தல் கமிஷன் கண்டுக் கொள்ள வில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முதல் நாள் அவர்கள் கல்லுாரி திறந்தவெளி பகுதி மரத்தடியில் படுத்திருந்தனர்.
மேலும் இரவு தேர்தல் அன்றும் முறையாக உணவு வழங்கவில்லை. இதனால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களும் இரவு வெகுநேரம் ஆனாதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் கடும் பாதிப்படைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE