கூடலுார் : சேதமடைந்த ஊட்டி, மைசூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி துவக்கப்பட்டது.
கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்கள், சேதமடைந்த சாலை சீரமைக்கபடாமல் கிடந்தது. ஓட்டுனர்கள் இப்பகுதி சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். சாலை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், ஓட்டுனர்கள்அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், சாலையை சீரமைக்க, மத்திய அரசு சார்பில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், முதுமலையில் சாலை சீரமைப்பு பணிகள் துவங்க தாமதம் ஏற்பட்டது.
தற்போது, வனத்துறை அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஊட்டி சாலை, 27வது மைல் பகுதியில் சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி சாலை, 27வது மைல் பகுதியில் சீரமைப்பு பணியின் தொடர்ச்சியாக, மைசூர் தேசிய நெடுஞ்சாலை, சீரமைக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE