குன்னுார் : குன்னுார் கன்டோன்மென்ட் வாரிய குடியிருப்புக்குள் புகுந்த முள்ளம் பன்றியால் மக்கள் அச்சமடைந்தனர்.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகள் அலுவலகம் அருகில் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு முன்ளம்பன்றி புகுந்தது. மாடியில் இருந்த, 6 குடும்பத்தை சேர்ந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அச்சமடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் குன்னுார் வனத்துறையினர் அங்கு சென்று முள்ளம்பன்றியை விரட்டினர். மீண்டும் முள்ளம்பன்றிகள் குடியிருப்புக்குள் நுழையும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE