ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு கட்டடம் பழுதடைந்தது.
குழந்தைகள் நலன் கருதி ஆபத்தான அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.சில ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மையத்திற்கு என தனி கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE