பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தேர்தல் பணிக்காக போலீசார் சென்றுள்ளதால், பஸ் ஸ்டாண்ட் சிக்னல் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆளின்றி, நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களே களமிறங்கி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
பொள்ளாச்சியில், காந்தி சிலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், போலீசார் அதிகளவு ஈடுபடுத்தப்பட்டுள்ளனற். கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சியில் இருந்து தேர்தல் முடிந்ததும் ஓட்டு பெட்டிகளை எடுத்துச் செல்ல போலீசார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். இதனால், நேற்று, சிக்னல் பகுதியில் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் இல்லை.
காந்தி சிலையில், தானியங்கி சிக்னல் இயங்கியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் இல்லை.அதே நேரத்தில், பஸ் ஸ்டாண்டில் போலீசார் இல்லாததால், தாறுமாறாக வாகனங்கள் சென்றன. வாகனங்கள் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த தன்னார்வலர் ஒருவர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.
ஒரு புறம் வாகனங்கள் செல்ல அனுமதித்து, நெரிசல் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.இதனால், போக்குவரத்து நெரிசல் விரைவிலேயே சீரடைந்தது. போலீசார் இல்லாத நிலையில், பொதுமக்களே களமிறங்கி, போக்குவரத்தை சீரமைத்தது, வியப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE