உடுமலை : தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், விரிவாக்கப்பணிகளுக்காக, அகற்றப்பட்ட சென்டர்மீடியன் மீண்டும் வைக்கப்படாததால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையால் பரமாரிக்கப் படுகிறது. உடுமலை நகரப்பகுதியில், இந்த மாநில நெடுஞ்சாலையில், இருபுறங்களிலும், அதிகரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் குறுகலான ஓடுதளம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருந்தது.
இதையடுத்து, கடந்தாண்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், நகரப்பகுதியில், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஏற்கனவே, ரோட்டில், சென்டர் மீடியன் தடுப்புகள் அகற்றி, ரோட்டோரத்தில் வைக்கப்பட்டன.பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், அய்யலுமீனாட்சி நகர் முதல் குறிப்பிட்ட துாரத்துக்கு, மீண்டும், சென்டர் மீடியன் வைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில், வாகனங்கள் தாறுமாறாக சென்று, விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
மாநில நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்புகளுக்கு, பிரிந்து செல்லவும், வாகன ஓட்டிகள் திணறும் நிலை காணப்படுகிறது. எனவே, சென்டர் மீடியன் தடுப்புகளை மீண்டும் அப்பகுதியில், வைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்.நகரப்பகுதியில், ரோட்டின் இருபுறங்களிலும், மீண்டும் அதிகரித்துள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்கு வரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE