கமுதி : கமுதி அருகே கழவன் பொட்டல் கிராமத்தை சேர்ந்த ராஜமல்லு 60,என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி குடும்பத்திற்கும் கடந்தாண்டு தீபாவளியன்று வெடி வெடித்தது சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் துரைபாண்டி தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் ராஜமல்லுவை தகாத வார்த்தையால் பேசி கிரிக்கெட் பேட் உட்பட பலத்த ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.ராஜமல்லு உறவினர் வேல்ராஜ்,பால்பாண்டி காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மண்டலமாணிக்கம் போலீசில் ராஜமல்லு மனைவி மல்லம்மாள் புகாரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வழக்குபதிவு செய்து கழவன்பொட்டலைச் சேர்ந்த துரைபாண்டி 65,சேகர் 32,விஜயேந்திரன் 28,சோலையப்பன் 60,கோபாலகிருஷ்ணன் 36,ஆனந்தகுமார் 26,அருண்குமார் 22,உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE