விருதுநகர் : விருதுநகரில் மது போதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொன்ற 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அய்யனார் நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி 40. சினிமா போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்தார். மது போதையில் குருசாமி அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது 17 வயது மகனிடம் போதையில் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த மகன் தந்தையை தாக்கி கொலை செய்தார். சிறுவனை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE