திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி பூங்கொடையைச் சேர்ந்தவர் செல்வராஜ் 25. ஓராண்டுக்கு முன்பு திரிபுரசுந்தரி என்பரை காதலித்து திருமணம் செய்தார். ஒன்பது மாத குழந்தை உள்ளது.
சில நாட்களாக செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஏப்.2 ம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். தீயில் கருகியபடி வீதியில் ஓடியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE