ஆத்தூர் : ஆத்தூரில் இருதரப்பு மோதல் மற்றும் மறியல் சம்பவங்களால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்துாரில் நேற்று முன்தினம் ஊர்காவலன் சுவாமி வழிபாட்டின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் சமரசத்தால் கலைந்து சென்றனர்.நேற்று இதே ஊரைச் சேர்ந்த வெற்றிவேல் 17, மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, மற்றொரு தரப்பினர் ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த வெற்றிவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒரு தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். செம்பட்டி போலீசார் இதே ஊரைச் சேர்ந்த தாஜ், நசீர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE