தென்காசி:நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார் கணவர். தடுத்த பெண்ணுக்கும் கத்தி குத்து விழுந்தது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர் ராஜகோபால் 28. இவர் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 23 ,வை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆலங்குளத்தில் வசித்துவந்தனர்.ராஜகோபால், அங்குள்ள சலுான் கடையில் வேலை பார்த்தார்.
மல்லிகா, கேபிள்டிவி நிறுவனத்தில் வேலை பார்த்தார், மனைவியின் நடத்தையில் ராஜகோபாலுக்கு சந்தேகம் வந்தது.நேற்று மாலை 6:00 மணியளவில் கேபிள் டிவி அலுவலகத்தில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார் ராஜகோபால். அதனை தடுத்த பக்கத்துவீட்டு பெண் மாரியம்மாள் 45, என்பவருக்கும் கத்திகுத்து விழுந்தது. ஆலங்குளம் போலீசார் ராஜகோபாலை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE